சென்னை: தமிழகத்தில் சி.ஏ.ஏ., என்பிஆர், என்ஆர்சி க்கு எதிரான போராட்டத்தை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சட்ட-ஒழுங்கு பாதுகாப்பு, முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க 6 ஐபிஎஸ் அதிகாரிகளை டி.ஜி.பி. நியமித்துள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த வெள்ளியன்று இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர் போலீசாரின் தடியடி நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.