சென்னை: அகில இந்திய அளவில் நடந்த ரயில்வே பாதுகாப்பு படையினருக்கான தடகளப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தெற்கு ரயில்வே வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை, பொது மேலாளர் ஜான் தாமஸ் பாராட்டினார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் ரயில்வே பாதுகாப்பு படை(ஆர்பிஎப்) வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்ற அகில இந்திய தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில் தெற்கு ரயில்வே அதிக போட்டிகளை வென்று முதலிடம் பிடித்ததுடன், சாம்பியன் பட்டமும் வென்றது. போட்டியில் 2வது இடத்தை மத்திய ரயில்வே பாதுகாப்பு படையும், மூன்றாவது இடத்தை சிறப்பு ரயில்வே பாதுகாப்பு படையும் வென்றன.