லண்டன்: கூப்பிய கரத்துடன் கேட்டுக் கொள்கிறேன். நான் தர வேண்டிய மொத்த பணத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். என்னை விட்டு விடுங்கள். நான் இந்தியாவுக்கு வர மாட்டேன் என விஜய் மல்லையா கூறியுள்ளார். கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையா, பாரத ஸ்டேட் வங்கி உட்பட பல்வேறு வங்கிகளில் தனது நிறுவனத்துக்காக வாங்கிய கடன், வட்டியுடன் சேர்த்து ₹9,000 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ளது. இவர் மீது சிபிஐ., அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளன. தற்போது லண்டனில் உள்ள அவரை நாடு கடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்தார். இதில் இறுதி வாதம் நேற்று முன்தினம் முடிந்தது. தீர்ப்பு வேறொரு நாளுக்கு லண்டன் கோர்ட் ஒத்தி வைத்துள்ளது.