திருச்சி: தேசியத் தொழில்நுட்பக் கழகம் திருச்சிராப்பள்ளி தொழில்முனைவோர் குழுமம் (E-cell) நடத்தும் நிகழ்வுகளில் முதன்மையானது தொழில் முனைவோர் உச்சி மாநாடு(E-summit ) ஆகும். இந்த நிகழ்வானது ஆர்வம் மிகுந்த,வளர்ந்து வரும் இளம் மாணவர் தொழில் முனைவோர் பயன் பெறும் வண்ணம், பலதரப்பட்ட, புதுமையான பணிமனைகளையும்(workshops), திறமை வாய்ந்த,சிறந்த தொழில் முனைவோர்களின் விருந்தினர் உரைகளையும்,அவர்களோடு உரையாடும் அமர்வுகளையும்,அத்தோடு சில முறைசாரா(informal) நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.