திருச்சி: திருச்சி பாஜ பிரமுகர் கொலை வழக்கில் 2 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். திருச்சி வரகனேரி பென்சனர் தெருவை சேர்ந்தவர் விஜயரகு (40). பாலக்கரை பகுதி பாஜ மண்டல செயலாளராக இருந்தார். கடந்த 27ம் தேதி விஜயரகு, காந்திமார்க்கெட் 6ம் எண் கேட்டில் வாகன வசூலில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஏர்போர்ட் பிலிக்கான் கோயில் தெருவை சேர்ந்த பாபு என்ற மிட்டாய் பாபு(20), அவரது நண்பர் சைக்கோ சங்கர் (25) ஆகியோர் அரிவாளை எடுத்து விஜயரகுவை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிந்து கொலையாளிகளை தேடி வந்தனர்.