×

சென்னை உள்பட பல்வேறு இடங்களில் 17 கோடியில் 14 புதிய தீயணைப்பு நிலையம்

சென்னை:  தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: செங்கல்பட்டு மாவட்டம்-மகாபலிபுரம், சென்னை மாவட்டம் - மேடவாக்கம் மற்றும் அண்ணாநகர் ஆகிய இடங்களில் 15 கோடியே 8 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 13 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் மற்றும் 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மெரினா கடற்கரை மீட்புப் பணிகள் நிலையம் என மொத்தம் 17 கோடியே 7 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 14 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

இதன் மூலம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வீரர்கள் உடனடியாக சென்றடையும் நிலை ஏற்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் சண்முகம், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் சைலேந்திர பாபு, மற்றும் அரசு பலர் கலந்து கொண்டனர்.



Tags : fire station ,places ,Chennai , Chennai, 14 new fire station
× RELATED அழகர்கோவிலில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி கோயில் ஊழியர்கள் பங்கேற்பு