×

கிண்டியில் நாளை நடக்கிறது தனியார் வேலைவாய்ப்பு முகாம்

சென்னை:  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் விஷ்ணு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து நாளை (வெள்ளிக்கிழமை) மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளது.  இந்த முகாமில் 35 வயதிற்கு உட்பட்ட 8ம் வகுப்பு, எஸ்எஸ்எல்சி., பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி), நர்சிங் ஆகிய கல்வி தகுதியை உடைய அனைவரும் (மாற்றுத்திறனாளிகள் உட்பட) கலந்துகொள்ளலாம். இந்த வேலைவாய்ப்பு முகாமில் 25க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த சேவைக்கு கட்டணம் ஏதுமில்லை. வேலைவாய்ப்பு முகாம் சென்னை-32, கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : camp ,placement , Kindy, Private Employment Camp
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு