சென்னை: ஆயிரம் விளக்கு பகுதியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்த முன்னாள் அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் ஆயிரம்விளக்கு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. எழும்பூர் பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மாநில கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. இந்த அறைக்கு ேநற்று முன்தினம் நள்ளிரவு அழைப்பு ஒன்று வந்தது. அந்த அழைப்பில் பேசிய நபர், ஆயிரம் விளக்கு பகுதியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கும் என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். உடனே சம்பவம் குறித்து கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீசார் ஆயிரம்விளக்கு காவல் நிலையத்திற்கு பேசிய நபரின் செல்போன் எண்ணுடன் தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார் சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை நடத்தினர்.