சென்னை: பராமரிப்புப்பணி காரணமாக ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: இன்றும், நாளையும் கும்மிடிப்பூண்டியில் இருந்து இரவு 9.45 மணிக்கு சென்னை கடற்கரைக்கு புறப்படும் ரயில் கொருக்குப்பேட்டை வழியாக மாற்றி இயக்கப்படுகிறது. இதே போல் நாளை, பிப்ரவரி 1ம் தேதி சென்னை கடற்கரையில் இருந்து இரவு 1.20 மணிக்கு அரக்கோணத்திற்கு புறப்படும் ரயில், இரவு 1.25 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து அரக்கோணத்திற்கு புறப்பட்டு செல்லும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.