துரைப்பாக்கம்: சோழிங்கநல்லூர் சிக்னலில் பைக் மீது டிப்பர் லாரி மோதியதில் ஆந்திராவை சேர்ந்த ஐ.டி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் வேணுபாபு (32). சோழிங்கநல்லூரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இவர், சிறுசேரியில் வீடு வாடகைக்கு எடுத்து, தனது மனைவி மற்றும் ஒரு வயது குழந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் வேணுபாபு பணி முடிந்து வீட்டுக்கு பைக்கில் புறப்பட்டார். சோழிங்கநல்லூர் சிக்னலில் வேணுபாபு பைக்குடன் காத்திருந்தார். அப்போது இவருக்கு பின்னால் ஒரு கார் நின்றிருந்தது. அதற்கு பின்னால் வந்த ஒரு டிப்பர் லாரி வேகமாக சிக்னலை கடந்தபோது காரின் மீது மோதியது.