அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் கட்டிட அனுமதிக்கு 20 ஆயிரம் லஞ்சம் : மாநகராட்சி ஊழியர் கைது

அம்பத்தூர்: அம்பத்தூர், புதூர் பகுதியை சார்ந்தவர் ராஜபாண்டியன் (59). வீடு கட்டுவதற்காக அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் உள்ள நகரமைப்பு பிரிவில் கட்டிட அனுமதிக்காக விண்ணப்பம் கொடுத்து இருந்தார்.  அங்குள்ள அதிகாரிகளை அணுகியபோது இளநிலை உதவியாளராக பணிபுரியும் கீழ் அயனம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ராம்பாபு (45) என்பவர் ராஜபாண்டியனிடம் 75 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். மேலும், முதல் தவணையாக ₹20 ஆயிரத்தை உடனே கொடுக்க வேண்டுமென கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜபாண்டியன் ஆலந்தூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அறிவுரைப்படி அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் ராம்பாபுவிடம் நேற்று மாலை கொடுத்துள்ளார். அங்கு மறைந்திருந்த இருந்த டிஎஸ்பி லவக்குமார் தலைமையில் போலீசார் ராம்பாபுவை பணத்துடன் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Related Stories: