சென்னை: சென்னை ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 12 ஆயிரம் ஏழை மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதற்காக கட்டப்படும் உணவுக்கூடத்திற்கு 2 கோடியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார். பிப்ரவரி 2019ல் கவர்னர் காலை உணவு வழங்கும் திட்டத்தை துவங்கினார். இது அட்சய பாத்திரா பவுண்டேஷன் மூலம் செயல்படுகிறது. இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. அட்சய பாத்திரா பவுண்டேஷன் ஒரு என்ஜிஓ நிறுவனமாகும். இது 12 மாநிலங்களில் 18 லட்சம் குழந்தைகளுக்கு நாள்தோறும் காலை உணவு வழங்கி வருகிறது.