‘சடலம் புதைக்கப்பட்டு பூக்கள் தூவப்பட்டுள்ளது’ காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் தொலைபேசி தகவல்: நாயின் சடலத்தை கண்டு அதிர்ச்சி

அண்ணாநகர்: திருமங்கலம், சத்தியசாய் நகர் பகுதியில் சடலம் புதைக்கப்பட்டு பூக்கள் தூவப்பட்டுள்ளதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்ம தொலைபேசி வந்தது. இதை நம்பி கொலை வழக்கு சிக்கும் என சென்ற போலீசாருக்கு நாயின் சடலமே சிக்கியது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், ‘திருமங்கலம், சத்தியசாய் நகர் பகுதியில் உள்ள காலி இடத்தில் ரத்தக்கறைகளுடன் சடலம் அரைகுறையாக புதைக்கப்பட்டு பூக்கள் தூவப்பட்டுள்ளது’’ என கூறிவிட்டு தொலைபேசி தொடர்பை துண்டித்துள்ளார்.

இதுகுறித்து திருமங்கலம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் சத்யசாய் நகருக்கு விரைந்து சென்று புதைக்கப்பட்டு இருந்த இடத்தில் தோண்டி பார்த்தனர். அப்போது, நாய் சடலம் புதைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. விசாரணையில் அந்த பகுதியை சேர்ந்த யாரோ பாசமாக வளர்த்த நாய் இறந்துவிட்டதால், அதை புதைத்து பூக்களை தூவி அஞ்சலி செலுத்தியது தெரிய வந்தது. எனவே போலீசாரின் நேரத்தை வீணடிக்க வைத்த அந்த மர்ம ஆசாமியை குறித்து விசாரிக்கின்றனர்.

Related Stories: