அண்ணாநகர்: திருமங்கலம், சத்தியசாய் நகர் பகுதியில் சடலம் புதைக்கப்பட்டு பூக்கள் தூவப்பட்டுள்ளதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்ம தொலைபேசி வந்தது. இதை நம்பி கொலை வழக்கு சிக்கும் என சென்ற போலீசாருக்கு நாயின் சடலமே சிக்கியது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், ‘திருமங்கலம், சத்தியசாய் நகர் பகுதியில் உள்ள காலி இடத்தில் ரத்தக்கறைகளுடன் சடலம் அரைகுறையாக புதைக்கப்பட்டு பூக்கள் தூவப்பட்டுள்ளது’’ என கூறிவிட்டு தொலைபேசி தொடர்பை துண்டித்துள்ளார்.