மூதாட்டியை தள்ளிவிட்டு 9 சவரன் நகைகள் பறிப்பு

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த பம்மல், சங்கர் நகர், எல்ஐசி காலனியை சேர்ந்தவர் ராதா (63). ஓய்வு பெற்ற காவல் துறை அமைச்சு பணியாளர் பிரிவு கண்காணிப்பாளர். இவர், நேற்று முன்தினம் இரவு பம்மல் பகுதியில் இருந்து சங்கர் நகரில் உள்ள தனது வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த ஒரு மர்ம நபர், இருட்டான பகுதியில் ராதாவை சரமாரியாக கைகளால் தாக்கினார். இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்து ரத்த காயத்துடன் அலறி துடித்துள்ளார். அப்போது ராதாவின் கழுத்தில் கிடந்த 9 சவரன் நகையை பறித்துக்கொண்டு மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த ராதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். புகாரின்பேரில் சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Related Stories: