உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குடிமங்கலம் ஒன்றியம் ஆமந்தகடவு கிராமத்திற்கு அருகில் தனியார் நிறுவனம் 300 ஏக்கர் பரப்பளவில் சோலார் மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் மின்சாரத்தை கொண்டு செல்ல விவசாயிகளின் அனுமதி இல்லாமால் பி.ஏ.பி. பாசனதிட்ட குழாய்களை உடைத்தும், விவசாய நிலங்கள் வழியாகவும் மின்கம்பங்கள் அமைத்து கொண்டு செல்கின்றனர். மேலும் நீர்வழிப்பாதைகளை அடைத்தும், விவசாயிகள் தங்கள் விளைநிலங்களுக்கு செல்லுகின்ற பாதைகள், ஓடைகள் ஆகியவற்றின் நடுவில் பாதையை மறைத்தும் கொண்டு சென்றனர். விளை நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக தனியார் நிறுவனம் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. உடன்பாடு முடியாத நிலையில், தனியார் நிறுவனம் நேற்று பணிகளை துவக்கினர்.