×

பாஜ தலைவர்கள் பேச்சு திகைப்பு ஏற்படுத்துகிறது: ப.சிதம்பரம் கருத்து

புதுடெல்லி: ‘டெல்லியில் பாஜ தலைவர்கள் பேசும் விதம், திகைப்பை ஏற்படுத்துகிறது,’ என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். டெல்லியில் வரும் 8ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜவை சேர்ந்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், பாஜ எம்பி பர்வேஷ் வர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசினர். பாஜ தலைவர்களின் பேச்சுகள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், பாஜ எம்பி பர்வேஷ் வர்மா, பாஜ மாநில தலைவர் திலிப் கோஷ் மற்றும் கர்நாடக பாஜ அமைச்சர் சிடி ரவி ஆகியோர் பேசும் விதமானது திகைப்பை ஏற்படுத்துகிறது. இவற்றை பார்க்கும்போது அவர்கள் டெல்லி தேர்தலில் உடனடி தோல்வியை எதிர்கொண்டதாக தெரிகிறது, பாஜ தலைவர்கள் நாகரீக அரசியல் பேச்சில் இருந்து விடை பெற்றுள்ளனர். பிரதமர் மோடியும், பாஜ தலைவரும் கூட, ‘இதுபோன்று பேசக்கூடாது’ என அவர்களை கண்டிக்கவில்லை,’ என கூறியுள்ளார்.

Tags : leaders ,Baja ,P. Chidambaram Baja ,P. Chidambaram , Baja leaders, Speech, Frustration, P Chidambaram, Opinion
× RELATED வடமாநில நபர்களின் வாக்குகளை...