×

இலங்கை தமிழர்களுக்காக உயிர்நீத்த முத்துக்குமார் ஏற்றிவைத்த லட்சியத்தீ ஒருநாளும் அணையாது: கொளத்தூரில் வைகோ பேச்சு

சென்னை: இலங்கை தமிழர்களின் பிரச்னைகளுக்காக தன்னுயிரை நீத்த முத்துக்குமார் ஏற்றி வைத்த லட்சிய தீ ஒருநாளும் அணையாது என்று கொளத்தூரில் வைகோ பேசினார். இலங்கை தமிழர்கள் பிரச்னைக்காக தன்னுயிர் நீத்த முத்துக்குமாரின் 11 ம் ஆண்டு நினைவு நாளான நேற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கொளத்தூரில் முத்துக்குமார் நினைவு தூணூக்கு மரியாதை செலுத்தினார். இதில், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு  தலைவர் த.வெள்ளையன், தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்க பேரமைப்பின் தலைவர் கொளத்தூர் ரவி, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு, முத்துக்குமாரின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறுகையில், ‘‘முத்துக்குமார் ஏற்றி வைத்த லட்சியத்தீ அணையாது என்றும். அது தமிழர்களின் நெஞ்சில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும். ஒருக்காலும் முத்துக்குமாரின் தியாகம் வீண் போகாது. அவன் உடலைப் பற்றி எரித்த நெருப்பு அணையாது’’ என்றார்.

Tags : Muttukkumar ,Sri Lankan Tamils ,Sri Lankan ,Tamils , Tamil_language tamil_language tamil_language tamil_language tamil news
× RELATED பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன்...