ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை கோடியூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு ஜோலார்பேட்டை சுற்றுப்பகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் 300க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையம் சிறிய அளவில் இருந்ததால் போதுமான கட்டிட வசதி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 30க்கும் மேற்பட்ட படுக்கை வசதியுடன் கூடிய புதிய மருத்துவ கட்டிடம் கட்டப்பட்டது. இதனால் கர்ப்பிணிகள் உள்பட அனைத்து தரப்பினரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பழைய ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் உள்ளூர் புறநோயாளிகள் அங்குள்ள மருத்துவரை சந்தித்து மருந்து மற்றும் ஊசிக்கான சீட்டுகளை பெற்றுக்கொண்டு ஊசி போடுவதற்காக செல்கின்றனர்.