×

கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றிய தலைவர் பதவிக்கான மறு தேர்தலுக்கு தடை விதித்தது சென்னை ஐகோர்ட்

சென்னை: கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றிய தலைவர் பதவிக்கான மறு தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் சம வாக்குகள் பெற்றதால், மறுதேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மங்கலூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்காக நாளை நடைபெறுவதாக இருந்த மறைமுகத் தேர்தலுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

அதிமுக, திமுக தரப்பில் தலா 12 உறுப்பினர்கள் தேர்வான நிலையில் தலைவர் பதவிக்கு நாளை தேர்தல் நடப்பதாக இருந்தது. குலுக்கல் முறையில் தலைவரை தேர்வு செய்யாமல், மறைமுக தேர்தல் நடத்த திட்டமிடுவதால் தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையம் மற்றும் அதிமுக வேட்பாளர் பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Cuddalore district ,re-election ,union ,Mangalore , Cuddalore district ,banned,re-election, Mangalore union
× RELATED கடலூர் மாவட்டம் ராமாபுரம் ஊராட்சியில் பெண் அடித்துக் கொலை!!