டெல்லி: சிஏஏ மற்றும் என்ஆர்சி.,க்கு எதிராக பல்வேறு மாவட்டங்களில் நடந்த போராட்டத்தின் போது கலவரம் ஏற்பட்டது. பலர் காயமடைந்துள்ளனர். 300 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். மஹாராஷ்டிராவின் புனே நகரில் சிஏஏ மற்றும் என்ஆர்சி.,க்கு எதிராகவும், பாரத் பந்த்திற்கு ஆதரவாகவும் பல்வேறு அமைப்புக்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. அனுமதியின்றி போராட்டம் நடத்தியதற்காக சுமார் 250க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் புனே நகரில் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். யவத்மால் பகுதியில் கடையடைப்பு போராட்டத்தின் போது கடையை திறந்து வைத்தவர் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். கடைக்காரர் மிளகாய் பொடியை தூவி போராட்டக்காரர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தி உள்ளார்.