×

இணையத்தை உலுக்கும் காலணி

நன்றி குங்குமம் முத்தாரம்

சமீபத்தில் கோபாலன் என்பவர் தமிழ்நாட்டின் ஆவுடையார்கோயிலில் உள்ள ஒரு பழமையான கோவிலை அலங்கரிக்கும் சிலையை டுவிட்டரில் பகிர்ந்திருந்தார். 900 ஆண்டு களுக்கு முன்பு செதுக்கப் பட்ட ஓர் ஆணின் சிலை அது. அந்த ஆண் அணிந்திருந்த காலணிதான் இப்போது இணையத்தில் ஹாட்டாக்.  

ஆம்; இந்தியாவின் பிரபல காலணி நிறுவனம் ஒன்று புது மாடலில் காலணிகளைச் சந்தையில் இறக்கியுள்ளது. அந்த மாடல் காலணியைத் தான் 900 ஆண்டுகளுக்கு முன்பான சிலையில் இருந்த ஆணும் அணிந் திருந்தார்.

‘‘ஆயிரம் வருடங்களுக்கு முன்பே தமிழர்கள் ஃபேஷனாக இருந்திருக்கிறார்கள்...’’, ‘‘உலக ஃபேஷனின் முன் னோடி தமிழர்கள்...’’ போன்ற கமெண்டுகள் அந்த டுவிட்டர் பதிவுக்குக் குவிகின்றன. சில மாதங் களுக்கு முன்புஹை ஹீல்ஸ் அணிந்த பெண்ணின் சிலை ஒன்று வைரலானது. அதுவும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தமிழ்நாட்டு சிலை.



Tags : Internet, Footwear
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்