வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் இந்திய வருகையின் போது அமெரிக்காவின் வர்த்தக முன்னுரிமை பட்டியலில் மீண்டும் இடம்பெறுவது குறித்து இந்தியா பேச்சு நடத்த இருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வருகின்ற பிப்ரவரி மாதம் 24ம் தேதி இரண்டு நாள் பயணமாக இந்தியா வர இருப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. அதிபராக பதிவியேற்ற பின் டிரம்ப் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும். பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச இருக்கும் டிரம்ப், இந்தியாவுடன் பல முக்கிய ஒப்பந்தங்களை ஏற்படுத்தயிருக்கிறார். முக்கியமாக இந்த சந்திப்பின் போது, வர்த்தகத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், கடந்த ஆண்டு எஃகு இறக்குமதிக்கு 25 சதவீதம் மற்றும் அலுமினிய பொருட்களுக்கு 10 சதவீதம் உலகளாவிய கூடுதல் கட்டணங்கள் விதித்த நிலையில், அதற்கு பதிலடியாக 28 தயாரிப்புகளுக்கு இந்தியா அதிக கட்டணங்களை விதித்தது.