குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட கருப்பு ஆடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: ஒரு சில மையங்களில் குரூப்-4 தேர்வு முறைகேடு நடந்திருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட கருப்பு ஆடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முறைகேட்டில் ஈடுபட்டது பெரும்புள்ளியாகவோ அல்லது எந்த புள்ளியாகவோ இருந்தாலும் நடவடிக்கை உறுதி எனவும் அவர் தெரிவித்துள்ளார். எந்த ஓட்டையும் இல்லாமல் வரும் காலங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்படும். ஒரு சில மையங்களில் நடந்த முறைகேட்டிற்காக ஒட்டுமொத்தமாக டிஎன்பிஎஸ்சி மீது குற்றம்சாட்டக்கூடாது.

Related Stories: