சென்னை: 3 ஆண்டுகளில் ரூ.23 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். வெங்காயத்தின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. விவசாயிகளுக்கு போதிய அளவு விவசாய கடன் வழங்கப்பட்டு வருகிறது. குடிமராமத்து பணிகளுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.