பாஸ்போர்ட் காலாவதியாகும் தேதி குறித்து முன்கூட்டியே தெரிவிக்கும் சேவை தொடக்கம்

டெல்லி: பாஸ்போர்ட் காலாவதியாகும் தேதி குறித்து முன்கூட்டியே பயனாளிகளின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல்(SMS) மூலம் நினைவுபடுத்தும் புதிய சேவையை பாஸ்போர்ட் சேவை மையங்கள் தொடங்கியுள்ளது. பாஸ்போர்ட் காலாவதியாகும் காலக்கெடு முடிவடைவதற்கு முன்பாகவே, பாஸ்போர்ட்டை புதுப்பிக்க பயனாளிகளுக்கு நினைவூட்டும் வகையில் தகவல் அனுப்ப, இந்திய வெளியுறவு அமைச்சகம் முடிவுசெய்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது அந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட்கள் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையில் தற்போது அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான நாடுகள் காலாவதியாக குறைந்தது 6 மாதத்திற்கு மேல் அவகாசம் கொண்ட பாஸ்போர்ட் வைத்திருப்போரை மட்டுமே தங்கள் நாட்டில் சுற்றுப்பயணம் செய்ய அனுமதிக்கின்றன. இதனால் காலாவதி ஆகும் நிலையில் உள்ள பாஸ்போர்ட்டை புதுப்பிக்க பலர் மறந்து விடுகின்றனர்.

இதனால் வெளிநாடுக்கு செல்வதில் பிரச்னையை ஏற்பட்டுவிடுகிறது. இந்நிலையில் பாஸ்போர்ட் காலாவதி ஆகும் தேதியிலிருந்து 9 மாதத்துக்கு முன்பும் அல்லது 7 மாதத்துக்கு முன்பும் பயனாளிகளின் பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு 2 முறை குறுந்தகவல்(SMS) அனுப்பி நினைவுபடுத்தும் சேவையை பாஸ்போர்ட் சேவை மையங்கள் தற்போது தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: