திருச்சி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு அரசு அனுமதிதரக்கூடாது என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். பாஜக பிரமுகர் விஜயரகு காந்தி மார்க்கெட்டில் கொலை செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்ட பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, விஜயரகுவின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.