நாசிக்: மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம், தேவ்லா அருகே கல்வன் என்ற இடத்தில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை உள்ளது. நேற்றுக் காலை இங்கிருந்து சிவ்சாஹி பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டுச் சென்றது. அந்த பஸ் மேஷி பாட்டக் என்ற இடத்தில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. அப்போது எதிர்திசையில் வந்த ஆட்டோ மீது மோதியது. இரு வாகனங்களும் மோதிக் கொண்ட வேகத்தில் சாலையோரத்தில் உள்ள கிணற்றில் விழுந்தன. இந்த கோர விபத்தில் 15 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.