லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அமைச்சரின் தொகுதியில் நடந்த அரசின் இலவச திருமண விழாவில், மணப்பெண்களுக்கு மேக்கப் போட ஆசிரியர்களை நியமித்தது பரபரப்பு ஏற்படுத்தியது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் சித்தார்த் நகர் மாவட்டத்தில், அமைச்சர் சதீஷ் திவேதியின் தொகுதியில் நேற்று முன்தினம் அம்மாநில அரசின் சார்பில் நடத்தப்படும் இலவச திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக திருமண விழாவில் மணப்பெண்களுக்கான மேக்கப் போட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். மாவட்ட கல்வித்துறையால் வெளியிடப்பட்ட இந்த உத்தரவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவியபின், அது மாலைக்குள் திரும்பப் பெறப்பட்டது. அந்த உத்தரவில், ‘முதல்வரின் திருமணத் திட்டத்தின் கீழ், மாவட்ட அடிப்படை கல்வி அலுவலக மைதானத்தில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட உள்ளது.