×

பாக். தொழிற்சாலை விபத்தில் 11 பேர் பலி

லாகூர்: பாகிஸ்தானின் லாகூரில் ஷாதரா பகுதியில் செயல்படும் வாசனை திரவியத் தொழிற்சாலையில் நேற்று திடீரென சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. அப்போது, தொழிற்சாலைக்குள் 15 பேர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இதில், இரண்டு பெண்கள், சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். சிலிண்டர் வெடித்ததில் கட்டிடத்தின் மேற்கூரை உள்பட முழுவதும் தீயில் கருகி நாசமாகின. மேலும், அருகில் இருந்த கட்டிடங்களிலும் லேசான விரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் பலமணி நேரப் போராட்டத்துக்கு பின்னர் தீயை அணைத்தனர். இதுவரை, 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது.


Tags : Pak. 11 ,factory accident , Pakistan factory cylinder blast kills 11 people
× RELATED விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த...