தஞ்சை:தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி கலசத்துக்கு தங்க முலாம் பூசும் பணி நிறைவடைந்தது. சிறப்பு பூஜையுடன் நாளை மீண்டும் கோபுரத்தில் கலசம் பொருத்தப்படுகிறது. தஞ்சை பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு, வரும் பிப்ரவரி 5ம் தேதி குடமுழுக்கு விழா நடக்கிறது. இதையொட்டி கோயிலில் திருப்பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோயிலில் 216 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள விமான கோபுரத்தை கண்டு உலகமே வியக்கிறது. இதன் உச்சியில் 12 அடி உயர கலசம் பொருத்தப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவையொட்டி, கலசத்தில் திருப்பணி செய்யும் வகையில் கடந்த 5ம் தேதி கீழே இறக்கப்பட்டது.