கோபி, பவானி, அந்தியூரில் பாசனத்துக்காக 120 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு: முதல்வர் அறிவிப்பு

சென்னை: கோபி, பவானி, அந்தியூர் வட்டங்களின் விவசாய நிலங்கள் பாசனத்துக்காக பவானி சாகரில் இருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால் பகுதியில் உள்ள 24,504 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் இரண்டாம் போக பாசனத்திற்கு 1.2.2020 முதல் 31.5.2020 வரை 120 நாட்களுக்கு 7776 மி.கன அடி நீரை திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன். இதனால், ஈரோடு மாவட்டத்தில் கோபி, பவானி மற்றும் அந்தியூர் வட்டம் ஆகியவற்றில் உள்ள 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories: