சென்னை: பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 30ம் தேதி (நாளை) டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று டாஸ்மாக் விற்பனையாளர் சங்கத்தினர் கூறினர். இதுதொடர்பாக தமிழக டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: 17 ஆண்டுகளாக பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். இஎஸ்ஐ முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். விற்பனையாளர்கள் மீது ஒருதலைபட்சமாக எடுக்கப்படும் பழிவாங்கும் நடவடிக்கை, அபராதம் விதிப்பது, பணியிடமாற்றம் செய்வது ஆகியவற்றை கைவிட வேண்டும். அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கழிவறை அமைக்க வேண்டும்.