சென்னை: .சென்னை சேப்பாக்கம், எழிலகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நேற்று நடந்தது.பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது, 2 கோடியே 2 லட்சத்து 30 ஆயிரத்து 886 குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. மேலும், புதிய குடும்ப அட்டைகள் கோரி பெறப்பட்ட 1 லட்சத்து 79 ஆயிரத்து 139 மனுக்களில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 838 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, 90 ஆயிரத்து 388 மனுக்கள் தகுதியின் அடிப்படையில் அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.