நன்னடத்தை விதி மீறிய ரவுடிக்கு 256 நாள் சிறை

ஆவடி: பட்டாபிராம், தண்டுரையை சேர்ந்தவர் நவராஜ் (22). பிரபல ரவுடி. இவர் கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி இனிமேல் குற்றச்செயலில் ஈடுபட மாட்டேன் என போலீசில்  நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தார். இந்நிலையில் கடந்த 15ம் தேதி இரவு பட்டாபிராம், தெற்கு பஜாரில் உள்ள பேக்கரி கடையில் கடனுக்கு பப்ஸ் தராததால் ஊழியர் திருப்பதி (30) என்பவருடன் தகராறில் ஈடுபட்டு கடையை சூறையாடி உள்ளார். புகாரின் பேரில் பட்டாபிராம் போலீசார் வழக்கு பதிவு செய்து நவராஜ், உதயகுமார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். நன்னடத்தை உறுதிமொழியை மீறியதாக நவராஜை பட்டாபிராம் போலீசார் நேற்று புழல் சிறையில் இருந்து காவலில் எடுத்து வந்தனர். பின்னர், அவரை துணை கமிஷனர் ஈஸ்வரனிடம் ஆஜர்படுத்தினர். இதன்பிறகு, அவர் நன்னடத்தை உறுதிமொழியை மீறியதாக நவராஜிக்கு ஓராண்டில் தவறுசெய்யாத நாட்களை கழித்து மீதி உள்ள 256 நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories: