கடலூர்: கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் கடலூர் வெள்ளிக் கடற்கரையில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. தூய்மைப் பணியை கல்லூரி முதல்வர் உலகி தொடங்கி வைத்தார். கடலோரப் பாதுகாப்புக் குழும கடலூர் பிரிவு உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கடற்கரையைப் தூய்மையாக பேணவேண்டியதன் அவசியம் குறித்தும், சமூகப் பணிகளில் மாணவர்களுடைய பங்கேற்பின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார். தேவனாம்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்.