×

நடிகர் ரஜினிக்கு எதிராக 2014ல் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற்றது வருமானவரித்துறை

சென்னை: நடிகர் ரஜினிக்கு எதிராக 2014ல் தொடரப்பட்ட வழக்கை வருமானவரித்துறை வாபஸ் பெற்றது. வழக்கை திரும்ப பெற அனுமதித்து வருமானவரித்துறை மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2002 - 2005 வரை வருமானவரியை முறையாக செலுத்தவில்லை என ரூ.66.22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் விதித்து வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீசை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்தது. மேல்முறையீட்டு தீர்ப்பாயம் நோட்டீசை ரத்து செய்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வருமானவரித்துறை வழக்கு தொடர்ந்தது.

Tags : Rajini ,Rajni , Rajni
× RELATED அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம்...