டெல்லி: தமிழகத்தில் மணல் குவாரிகளை அமைக்கும்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகம் வெளியிட்டது. மணல் தேவை, விநியோகம், முறைகேட்டை தடுத்தல் ஆகியவற்றுக்கு தனி அமைப்பை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஆற்றுப் படுகைகளில் இருக்கும் மணல் குவாரிகள் கனமழையின் போது வெள்ளப்பெருக்கு ஏற்படாத வகையில் உறுதி செய்யுமாறு தெரிவித்தனர்.