சென்னை: முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளதாக கண்காணிப்புக் குழு தலைவர் குல்சன் ராஜ் கூறியுள்ளார். முல்லைப் பெரியாறு அணையை 3 நபர் கண்காணிப்புக் குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கண்காணிப்புக் குழு தலைவர் குல்சன் ராஜ், தமிழக அரசின் பராமரிப்பு பணிக்கு கேரள அரசு இடையூறு செய்யக்கூடாது என தெரிவித்துள்ளார்.