லாகூர்: இந்தியாவால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் விடுதலைப்படையின் தலைவர் ஹர்மீத் சிங், பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். லாகூரில் உள்ள தேரா சாஹல் குருத்வாராவில் உள்ள கடத்தல் கும்பலுடன் ஏற்பட்ட மோதலில் ஹர்மீத சிங் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பஞ்சாபில் கடந்த 2016 மற்றும் 2017ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர்கள் கொல்லப்பட்ட வழக்கில், ஹர்மீத் சிங் தேடப்பட்டு வந்தவர் ஆவார். 2018ம் ஆண்டு அமிர்தசரஸில் மத வழிபாட்டின்போது குண்டுவெடித்ததில் 3 பேர் கொல்லப்பட்ட வழக்கிலும் இவர் தொடர்புடையவர் ஆவார்.