புதுடெல்லி: துரோகிகளை சுட்டுத்தள்ளுங்கள் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதால் எழுந்த சர்ச்சை அடங்குவதற்குள், பள்ளிவாசல்கள் இடிக்கப்படும் என்று பாரதிய ஜனதா எம்.பி. கூறியிருப்பது மேலும் சர்ச்சையை அதிகரித்துள்ளது. பாரதிய ஜனதாவை சேர்ந்த டெல்லி மேற்கு தொகுதி எம்.பி.யான பர்வேஷ் வர்மா தான் மத மோதலை உண்டாக்கும் இந்த சர்ச்சை கருத்தை கூறியுள்ளவர். விகாஷ்புரி சட்டப்பேரவை தொகுதிக்குபட்பட்ட ரன்புல்லா கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பர்வேஷ் வர்மா பங்கேற்று பேசினார். டெல்லியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் அரசு நிலங்களில் உள்ள பள்ளிவாசல்கள் அனைத்தும் இடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஒரு மாத காலமாக டெல்லி ஷாஹின் பாக்தில் நடந்து வரும் போராட்டத்தை பாரதிய ஜனதா எம்.பி. பர்வேஷ் வர்மா சாடியுள்ளார்.