சென்னை: சீனாவில் உள்ள தமிழர்களை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. கரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான சீனாவில் உள்ள தமிழர்களின் நிலை குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு முறையிட்டுள்ளது. மேலும் சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தையும் தமிழக அதிகாரி தொடர்பு கொண்டு அங்குள்ள தமிழர்களுக்கு உதவ கோரிக்கை விடுத்துள்ளனர்.