தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு முகநூல் வாயிலாக மணிகண்டன் என்பவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தூத்துக்குடி திமுகவின் தெற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருபவர் அனிதா ராதாகிருஷ்ணன். திருச்செந்தூரில் கடந்த 2001ம் ஆண்டிலிருந்து தற்போது வரை 4 முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். அதிமுகவில் அமைச்சராக இருந்து, பின்னர் திமுகவிற்கு சென்றவர் என்றாலும், மக்கள் செல்வாக்குடன் திமுகவின் தெற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். இந்நிலையில் திருச்செந்தூர் கோட்டை தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவர், தீபிகா மணிகண்டன் என்ற தமது முகநூல் பக்கத்தில் எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்து, வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். பின்னர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சினிமா பாணியில் மணிகண்டன் சவால் விடுத்துள்ளார்.