தூத்துக்குடி எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு முகநூல் வாயிலாக கொலை மிரட்டல்

தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்ட எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு முகநூல் வாயிலாக மணிகண்டன் என்பவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தூத்துக்குடி திமுகவின் தெற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருபவர் அனிதா ராதாகிருஷ்ணன். திருச்செந்தூரில் கடந்த 2001ம் ஆண்டிலிருந்து தற்போது வரை 4 முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். அதிமுகவில் அமைச்சராக இருந்து, பின்னர் திமுகவிற்கு சென்றவர் என்றாலும், மக்கள் செல்வாக்குடன் திமுகவின் தெற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். இந்நிலையில் திருச்செந்தூர் கோட்டை தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவர், தீபிகா மணிகண்டன் என்ற தமது முகநூல் பக்கத்தில் எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்து, வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். பின்னர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சினிமா பாணியில் மணிகண்டன் சவால் விடுத்துள்ளார்.

அனிதா ராதாகிருஷ்ணன் தனது ஆதரவாளர்களை ஏவி தன்னை தாக்க வந்ததாகவும், வீட்டில் உள்ளவர்களை மிரட்டி செல்வதாகுவும் மணிகண்டன் குற்றம் சாட்டியுள்ளார். பின்னர், இந்த மிரட்டல் விடியோவை வெளியிட்டுள்ள மணிகண்டன் தற்போது தலைமறைவாகிவிட்ட நிலையில்,  இந்த வீடியோ தூத்துக்குடியில் உள்ள வாட்ஸ் ஆப் குழுக்களில் பகிரப்பட்டுவருகிறது. இதையடுத்து மணிகண்டனை, அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்களும், காவல் துறையினரும் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: