டெங்கு, டைபாய்டு, மலேரியா குறித்த வழக்கு உயர் நீதிமன்ற வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

சென்னை: டெங்கு, மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட நோய்களை முழுமையாக கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்சுகின் உச்ச நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்சுகின் மனுவில் உள்ள சாராம்சங்களையும், நோய் பாதிப்பால்  ஏற்படும் பிரச்னைகள் குறித்து தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதிகள் “மேற்கண்ட விவகாரத்தில் புதிய உத்தரவு எதுவும் பிறப்பிக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை. இருப்பினும் இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கியுள்ள  முந்தைய உத்தரவு என்பதே போதுமானதாகும். அதனை தமிழக அரசு உடனடியாக மாவட்ட வாரியாக செயல்படுத்த வேண்டும்’’ என உத்தரவிட்டனர். மேலும், இதுதொடர்பான மனுவை தள்ளுபடி செய்தனர்.

Related Stories: