ஈரோடு: கோவை மாவட்டம் இருகூர் முதல் கர்நாடகா மாநிலம் தேவனகந்தி வரை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் விளைநிலங்களில் குழாய்கள் பதித்து பெட்ரோல், டீசல் போன்றவை கொண்டு செல்லப்பட உள்ளது. இதற்காக குழாய்கள் பதிப்பதற்காக விரைவில் விளைநிலங்களை அரசு கையகப்படுத்த உள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடி வரும் நிலையில் நேற்று முன்தினம் குடியரசு தினத்தையொட்டி ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடந்த கிராமசபை கூட்டங்க ளில் 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் இத்திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.