புதுடெல்லி: விவசாயத்தை பெரிதும் பாதிக்கும் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதிக்க ேகாரி தமிழக காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்துள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்ட ஆய்வுக்கு சுற்றுச்சூழல் அனுமதியோ அல்லது மக்களின் கருத்தை கேட்கவோ தேவையில்லை என்ற அறிவிப்புக்கு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாய சங்கங்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். மேலும் இது குறித்து கிராம சபை கூட்டங்களிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. இந்த நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தமிழக காவிரி டெல்டா விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தரப்பில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.