விபத்து வழக்கிற்கான லோக் அதாலத் மூலம் சட்டபணிகள் ஆணைகுழு 3 கோடி வசூல்

சென்னை,ஜன.28: சென்னை மாவட்ட சட்ட பணிகள் ஆணைகுழு நடத்திய சிறப்பு லோக் அதாலத்தில் ஜனவரி மாதத்தில் 132 வழக்குகளுக்கு முடித்து வைக்கப்பட்டு, 3 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. தேசிய சட்டபணிகள் ஆணைகுழு உத்தரவின்படி மாநில தோறும் உள்ள, மாவட்ட சட்டபணிகள் ஆணைகுழுவில் மாதம்தோறும் சிறப்பு லோக் அதாலத் நடத்தப்படுகிறது. அதன்படி சென்னை மாவட்ட சட்டபணிகள் ஆணைய குழு செயலாளர் ஜெயந்தி, மாணவர்களின் கல்வி கடனுக்கான சிறப்பு லோக் அதாலத், மோட்டர் வாகன விபத்திற்கான லோக் அதாலத் என்று நடத்தி வருகின்றார். அதன்படி ஜனவரி மாதத்தில் 132 மோட்டர் வாகன விபத்து வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.  அதில், 112 வழக்குகள் விசாரணைகள் முடிவுக்கு வந்தது. இருதரப்பும் சமரசம் செய்யப்பட்டு, 3 கோடியே 3 லட்சத்து 58 ஆயிரத்து 356 வசூல் செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

Related Stories: