சென்னை: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்ரவரி 3ம்தேதி நடைபெறும் அமைதிப் பேரணியில் திரளாக பங்கேற்க திமுக மாவட்ட செயலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து, சென்னை மேற்கு, தெற்கு, கிழக்கு, வடக்கு மாவட்ட திமுக செயலாளர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சி தந்த காவியத் தலைவர், தென்னகத்தின் மிகப் பெரும் அரசியல் தலைவர் பேரறிஞர் அண்ணா. அவரது 51வது நினைவு நாளை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மற்றும் திமுக முன்னணியினர் வரும் 3ம் தேதி திங்கட்கிழமை காலை 7 மணிக்கு காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவர்.