×

‘கணவரை காணோம்’ என புகார் கொடுக்க வந்தவரை வலையில் வீழ்த்தினார் விசாரணை என்ற பெயரில் பெண்ணுடன் ஏட்டு உல்லாசம்: நள்ளிரவில் வீட்டு கதவை பூட்டி சிறைபிடித்த ஊர்மக்கள்

துறையூர்: கணவரை காணவில்லை என புகார் கொடுக்க வந்த பெண்ணை வலையில் வீழ்த்தி விசாரணை என்ற பெயரில் நள்ளிரவில் அடிக்கடி அவரது வீட்டுக்கே சென்று உல்லாசமாக இருந்த ஏட்டுவை ஊர்மக்கள் பொறி வைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த புலிவலத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (25). இவரது மனைவி லட்சுமி (27). (இருவரின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது). 7 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்தனர். குழந்தைகள் இல்லை. கடந்த 4 மாதங்களுக்கு முன் வேலைக்காக சென்னைக்கு சென்ற கணவனை காணவில்லை என புகார் கொடுக்க புலிவலம் போலீஸ் நிலையம் சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த மணப்பாறையை சேர்ந்த ஏட்டு ராமர் (43) புகார் மனுவை வாங்கி லட்சுமியிடம் விசாரித்தார். அவர் தனிமையில் இருப்பதை தெரிந்து கொண்ட ஏட்டு ராமர், லட்சுமியை தனது வலையில் வீழ்த்தி விசாரணை என்ற பெயரில் அடிக்கடி போலீஸ் நிலையம் வரவழைத்தார். பின்னர் அவரது செல்போன் எண்ணையும் வாங்கிக்கொண்டு நள்ளிரவில் விசாரணை என்ற பெயரில் பேச தொடங்கினார்.

இப்படி பல நாட்கள் பேசியதை தொடர்ந்து இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து ஏட்டு ராமரின் விசாரணை லட்சுமி வீடு வரை நீடித்தது. அடிக்கடி நள்ளிரவில் வீட்டுக்கு சென்று லட்சுமியிடம் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. தனிமையில் இருக்கும் இளம்பெண் வீட்டுக்கு ஏட்டு ஏன் அடிக்கடி வருகிறார் என ஊர்மக்கள் சந்தேகம் அடைந்தனர். அவர்களை கையும் களவுமாக பிடிக்க அந்த பகுதி மக்கள் முடிவு செய்தனர். நேற்றுமுன்தினம் நள்ளிரவு ஊர் அடங்கிய நேரத்தில் ஏட்டு ராமர், லட்சுமி வீட்டுக்கு வந்தார். கதவை திறந்ததும் உள்ளே சென்றவர், உள்பக்கமாக தாழ்போட்டு கொண்டனர். இதை கவனித்த அக்கம் பக்கத்தினர் வெளிப்பக்கமாக பூட்டு போட்டு வீட்டை பூட்டிவிட்டனர். உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறை 100க்கு போன் செய்து ஏட்டு ராமரின் நள்ளிரவு விசாரணை குறித்து தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் புலிவலம் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் கதவை தட்டி ஏட்டு ராமரை வெளியே வரும்படி கூறினர். அவர் வெளியே வந்தபோது ஊர் மக்களும், புலிவலம் போலீசாரும் நின்றிருந்தனர்.

வெளியே வந்த ஏட்டு ராமரையும், லட்சுமியையும் ஊர்மக்கள் செல்போனில் படம் பிடித்தனர். இதனால் ஏட்டு அதிர்ச்சி அடைந்து முகத்தை கைகளால் மூடினார். படம் பிடித்தவர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விட்டார். பின்னர் அங்கிருந்து சென்ற ஏட்டு ராமர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என லட்சுமியின் அக்கா புலிவலம் போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் எஸ்.ஐ. முத்துசாமி அந்த புகாரை பெற மறுத்து விட்டார். இது தொடர்பாக ஜீயபுரம் டிஎஸ்பி கோகிலாவிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் டிஎஸ்பி அங்கு வந்து அக்கம் பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில், பல மாதங்களாக ஏட்டு ராமர் நடத்திய நள்ளிரவு உல்லாசம் குறித்து அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து எஸ்.பி. ஜியா வுல் ஹக்குக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏட்டு ராமர் நேற்று ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றப்பட்டார். அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க விசாரணை நடப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Complaint, web, trial, girl, picnic, midnight, jail, town
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே...