சென்னை: பிட்காயின் மற்றும் ஆன்லைன் வியாபாரம் மூலம் 1878 பேரிடம் இருந்து ரூ.14 கோடி வசூலித்து மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. கோபிச்செட்டிப்பாளையத்தில் கே.ஏ.எஸ் குரூப் என்ற நிறுவனத்தின் பெயரில் 1872 பேரிடம் மோசடி நடந்துள்ளது. தங்களது பணத்தை மீட்டுத்தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். 3000க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து பல நூறு கோடி பணம் வசூலித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.