சென்னை: ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த விவகாரத்தில் பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, சென்னை மயிலாப்பூர் வரதராஜ புரத்தில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீசார் காவலில் உள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் ஆயுதப்படை காவலர் மணிகண்டன் பணியில் இருந்தபோது அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் திடீரென பெட்ரோல் குண்டுகளை எடுத்து அவர் மீது வீச முயற்சித்ததாக கூறப்படுகிறது. உடனே காவலுக்கு இருந்த மணிகண்டன் அந்த மர்ம நபர்களை பிடிக்க முயன்றுள்ளார்.